திருமண தடை நீக்கும் ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம்

ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம்

ஸ்வயம்வர பார்வதி தேவி
ஸ்வயம்வர பார்வதி தேவி

ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி
யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய
முக ஹ்ருதயம் மம வசம்
ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ:

இந்த ஸ்வயம்வர பார்வதி மூலமந்திரத்தினை பயமின்றி நீங்களே ஜபித்து பயனடையலாம். படிக்கும்போது கொஞ்சம் கடினமானது போல இருக்கும். அர்த்தம் தெரிந்து ஜபித்தால் மிகவும் எளிது. உங்களுக்கு ஏதேனும் விவரங்கள் வேண்டும் என்றால் எந்த வித தயக்கமுமின்றி என்னை (என் பெயர் ஸ்ரீவத்ஸன்) 9944888886 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

பார்வதி தேவியின் கருணையினாலும் அருளினாலும் இங்கு வந்திருக்கும் உங்களுக்கு அணைத்து தடைகளையும் தகர்த்து நீங்கள் தற்போது ஈடுபட்டிருக்கும் முயற்சியில் வெற்றி பெற ஸ்வயம்வர பார்வதி தேவி கண்டிப்பாக அருள்புரிவார்.

(to read this page in English: https://swayamvaraparvathi.org/marriage/

ஸ்வயம்வர பார்வதி மூல மந்திர ஜபத்தின் மகிமை
• துர்வாசர் அருளியது.
• பார்வதியினால் பரமசிவனை மணக்க முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
• காயத்ரி மந்த்ரத்திற்கு இணையானது. (காயத்ரி மந்த்ரம் 24 அட்சரங்களால் ஆனது. ஸ்வயம்வரபர்வதி மந்த்ரம் 48 அட்சரங்களால் ஆனது.)
• அணைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம்.
• காதல் திருமணம் நடைபெற தடங்கல்கள் இருப்பினும் அத்தனையும் நீக்கி காதல் திருமணம் நடைபெற உதவி புரியும் ஒரு உத்தம மந்திரம்
• மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம் வளரவும், விவாகரத்து ஆகாமல் தடுக்கவும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.

இந்த ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரத்தினை ஒரு நாளைக்கு எத்தனை முறை எவ்வளவு நாட்கள் செய்ய வேண்டும்?

தினமும் 1008 முறை 108 நாட்கள் விடாமல் பாராயணம் செய்துவந்தால், திருமண தடைகள் அனைத்தும் நீங்கி, விருப்பம்போல் வாழ்க்கை துணை கண்டிப்பாக கிடைக்கும்

இந்த ஜபம் நீங்களே செய்யலாமா? அல்லது பிராமணர்களை வைத்தே செய்யவேண்டுமா?

பயம் இல்லாமல், தைரியமாக நீங்களே பாராயணம் செய்யலாம். மந்த்ரம் தப்பாக உச்சரித்து விட்டால், தெய்வ குற்றம் வருமோ, அல்லது தீங்கு நேருமோ என்ற பயம் தேவையே இல்லை.

கடவுள் அன்னையை போன்றவர். குழந்தை பூ, பூ என்று அழுதாலும், அன்னை உணவை கொடுப்பாளே அன்றி, பூ பறித்து வந்து கொடுக்கமாட்டாள். கடவுளும் அன்னைக்கு ஒப்பானவர். கனிவானவர். எனவே நீங்கள் தவறாக உச்சரித்தாலும், உங்களுக்கு தேவையானதை உணர்ந்து, நிறைவாகவே செய்வார்.

(உதாரணம்: வால்மீகி மரா, மரா என்றே ஜபித்தார். ஆனாலும், அதை ராம, ராம என்றே கடவுளால் கொள்ளப்பட்டு, ஞானம் அருளி, ராமாயணமும் படைத்தார். இங்கு குலமோ, கோத்ரமோ, ஞானமோ, அறிவோ அடிப்படை இல்லை. வெறும் பக்தியும், நம்பிக்கையுமே இறை வழிபாட்டில் முக்கியம்)

குழந்தை பசித்தால் அழும். அழுத குழந்தைக்கே உணவு கிடைக்கும். ஏனெனில் தாய்க்கு நினைவூட்ட வேண்டியது குழந்தையின் கடமை. அதே போல், இந்த ஸ்வயம்வர பார்வதி மந்த்ரமும் தேவிக்கான ஒரு நினைவூட்டலே. கண்டிப்பாக அம்பாள் வேண்டுவோருக்கு அருளுவார்.

(உங்களால் முடியாவிட்டால், 16 வருடங்களாக நாங்கள் செய்து கொண்டு வரும் இந்த ஸ்வயம்வர பார்வதி ஜப யக்ஞத்தில் சேரலாம். விவரங்கள் கீழே உள்ளது.)

செய்முறை (ஜெபிக்கும் முறை)
• சங்கல்பம்: சங்கல்பம் என்பது கடவுளுக்கு முன் எடுக்கும் சத்தியம். தங்களது பெயர், கோத்ரம், நக்ஷத்ரம் மற்ற விவரங்களை கூறி, (கடவுளுக்கு தமிழும் தெரியும். எனவே நீங்கள் கண்டிப்பாக தமிழிலும் சங்கல்பம் எடுக்கலாம்.) 1008 முறை ஸ்வயம்வரபர்வதி மந்த்ரம் 108 நாட்களுக்கு விடாமல் செய்வேன் என்று கூறவும்.
• நேரம்: சுமார் இரண்டு மணி நேரம் ஆகும்.
• தினசரி தேவை: பூ, தீபம், ஊதுபத்தி, கற்பூரம், நைவேத்யம், பழம், தாம்பூலம்.
• பூரண பக்தி: ஜெபிக்கும்போது கடவுளை மட்டுமே நினைத்தல் வேண்டும். தினசரி வேலை மற்றும் கவலைகளை சற்றே ஒதுக்கி ஜபம் செய்தல் வேண்டும். (வாழும் வரை கவலைப்பட நேரம் அதிகம் உள்ளது. எனவே, இந்த 108 நாட்களுக்கு தினமும் 2 மணி நேரம் கடவுளுக்கு மட்டும் ஒதுக்கலாமே.)
ஆலோசனை (அ) எச்சரிக்கை: சங்கல்பம் எடுக்கும் முன்னர், ஒன்றிரண்டு நாட்களுக்கு, சங்கல்பம் இல்லாமல் சாதாரணமாக 1008 முறை ஜபம் செய்து பாருங்கள். ஏனெனில், ஜபம் இரண்டு மணி நேரம் ஆகும். உங்களால் முடியும் என்றால் மட்டும் சங்கல்பம் எடுத்து 108 நாட்கள் ஜெபியுங்கள். இல்லையேல், கவலை வேண்டாம். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

திருமணம் மட்டுமின்றி, தம்பதி ஒற்றுமை, விவாகரத்து ஆகாமல் தடுக்கவும், குழந்தை பாக்கியதிற்கும் ஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம் சிறப்பான பலன் அளிக்கும்.

14 வருடங்களாக ஒருநாள் விடாமல் நாங்கள் செய்து கொண்டு வரும் இந்த ஸ்வயம்வர பார்வதி ஜப யக்ஞத்தில் சேரலாம்.

ஸ்வயம்வர பார்வதி ஜப யக்ஞத்தில் சேர .

1. உங்களின், பெயர், நக்ஷத்திரம், ராசி, (நக்ஷத்திரம், ராசி தெரியாதென்றால், உங்களின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் குறிப்பிட வேண்டும்),

2. கோத்ரம் (தெரிந்தால்),

3. எந்த நோக்கத்திற்காக ஜபம் செய்யவேண்டும், (இவையெல்லாம் சங்கல்பத்திற்கு).

4. உங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் (பூஜை முடிந்தவுடன் ஒரு வெள்ளி டாலர் பிரசாதம் அனுப்ப) ஆகியவற்றை srivathsan@swayamvaraparvathi.com  என்ற எங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

முக்கிய குறிப்பு : பூஜை 130-140 நாட்கள் ஆகும். தினமும் https://www.facebook.com/SwayamvaraParvathiMantraforMarriage/என்ற எங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் காலை 7.00 மணிக்கு இந்த ஜபத்தினை நேரிடையாக காணலாம். தினசரி காலெண்டர் இருக்கும். யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் எழக்கூடாது.

எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்.
(இந்தியா)

வெள்ளி டாலர்          – ரூபாய் 200.
பூஜை பொருட்கள்   – ரூபாய் 1080 (ரூ.10 * 108 நாட்கள்)
தட்சணை                   – ரூபாய் 1188 (ரூ.11 * 108 நாட்கள்)
தபால் செலவு            – ரூபாய் 40

மொத்தம்                    – ரூபாய் 2508 (108 நாட்களுக்கும் சேர்த்து)

வெளிநாடு

US$108 (US$1 per day for 108 days). வெளிநாட்டில் இருப்போர் ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டாலர் வீதம் 108 நாட்களுக்கு 108 டாலர் கொடுக்க வேண்டியிருக்கும். (US $108 for 108 days )

எப்படி பணத்தை செலுத்துவது?

1. இணையம் மூலம் (ஆன்லைன்) ICICI a/c க்கு செலுத்தலாம். : SRIVATHSAN KRISHNASWAMY – ICICI A/c No.0014 0102 3224 (Branch: Srirangam; IFSC Code: ICIC0006125

2. பே – டிஎம் (Paytm ), கூகுள் பே (Google pay ) மூலம் எமது தொலைபேசி 9944888886 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.

3. வெளிநாட்டில் இருப்போர் பே-பால் மூலம் எமது Paypal id ::: srivathsan@swayamvaraparvathi.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

தினமும் நடைபெறும் ஸ்வயம்வர பார்வதி பூஜையின் இன்றைய (27.04.2024) காணொளி


Paypal



Option 4: You can send a DD/Cheque in favour of K.SRIVATHSAN payable at Trichy and can be sent along with your required details to our address:

K.SRIVATHSAN, S-3, Bharath Castle, Old EB Office Road, Srirangam, Trichy  – 620006. Tamilnadu.   Phone: 99448 88886

You can contact me over the phone for any help. Srivathsan @ 99 44 88 88 86 

Tags: சுயம்வர கலா பார்வதி ஹோமம், திருமண தடை நீக்கும் ஸ்லோகம், திருமண தடை நீக்கும் பதிகம், திருமணத்தடை நீங்க என்ன செய்ய வேண்டும், ஸ்வயம்வர பார்வதி, விரைவில் திருமணம் ஆக, திருமண தடை அகல, ஸ்வயம்வர பார்வதி மந்திரம், திருமணம் விரைவில் நடக்க பரிகாரம், திருமண தடை நீங்க மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம், பார்வதி தேவி மூல மந்திரம், திருமணத் தடை நீக்கும் திருத்தலங்கள், திருமணத் தடை நீங்க எளிய பரிகாரங்கள், சுயம்வர பார்வதி மந்திரம், திருமண தடை நீங்க மந்திரம், திருமணம் கைகூட, ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம், சுயம்வரா பார்வதி மூல மந்திரம், திருமண தடை நீங்க மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம், திருமண தடையா, திருமணம் உடனே நடைபெற, Swayamvara Parvathi Mantram in tamil, Swayamvara parvathi Moola Mantra in Tamil, swayamvaraparvathi in tamil, swayamvara parvathi pooja in tamil,




Web Analytics

Share
Share
Share